கை விரித்த உச்ச நீதிமன்றம்.. ஓபிஎஸ் கையில் இருக்கும் இறுதி வாய்ப்பு.. இன்று நடக்க போகும் மாற்றம்.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர். 

கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து பொதுக்குழுவிற்கு தடை கோரி மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே, ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக விசாரித்து உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தை உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், பொதுக்குழுவிற்கு எதிரான ஒ.பன்னீர் செல்வம் வழக்கை உயர்நீதிமன்றம் இன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தது. 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஒ.பன்னீர் செல்வம் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.