தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கு அமைய வாராந்தம் (ஞசு ளுலளவநஅ) கீழ் விநியோகிக்கப்படும் பெற்றோல் மற்றும் டீசல்; பங்கின் .அளவு அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, வேன், கார்களுக்கு 20 லிட்டர் வரை டீசல் அல்லது பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேபோன்று முச்சக்கர வண்டிகளுக்கு 05 லிட்டர் டீசல் அல்லது பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய ஒரு வாரத்திற்கு மோட்டார்சைக்கிளுக்கு 4 லிட்டர் பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பஸ்களுக்கு வாராந்தம் 40 லிட்டர் டீசல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய லொறிகளுக்கு வாராந்தம் 50 லிட்டர் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கு (ஞசு ளுலளவநஅ) திட்டம் தற்போது பல இடங்களில் : பரி சோதனை செய்யப்பட்டு வருகிறது, ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.