ஆஸ்திரேலியாவில் நடைபெறும் படவிழாவில் அபிஷேக் பச்சன், கபில் தேவ் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார்கள்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்திய பட விழாவில் அபிஷேக் பச்சன் மற்றும் கபில் தேவ் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏற்ற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாண அரசின் நிதி பங்கீட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய படவிழாவின் 13வது ஆண்டு படவிழா ஆகஸ்ட் மாதம் 12 முதல் 30 வரை நடைபெற இருக்கிறது.

இந்த படவிழாவில் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள இந்தியர்கள் பலரும் வருகைதருவார்கள்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி இந்த ஆண்டு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அபிஷேக் பச்சன் மற்றும் கபில்தேவ் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார்கள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அபிஷேக் பச்சன் “இந்திய தேசிய கொடியை மெல்போர்னில் உள்ள புகழ்பெற்ற ஃபெடரேஷன் சதுக்கத்தில் ஏற்றுவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.