கள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 7 பேர் கைது

கள்ளக்குறிச்சி:
ள்ளக்குறிச்சி கலவரத்தில்  தொடர்புடைய  மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூர் கிராமத்தில் பள்ளி மாணவி மரணம் அடைந்த விவகாரம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், கணியமூர் கிராமத்தில் நடைபெற்ற வன்முறை மற்றும் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்காக சேலம் ரேஞ்ச் டிஐஜி பிரவீன்குமார் அபினாபு தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க டிஜிபி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டது.

இதை ஏற்று, டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். கனியாமூர் வன்முறை தொடர்பாக 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் கணியாமூர் கலவரத்தின் போது பள்ளியின் சுவரை சேதப்படுத்திய 7 பேரை கைது செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.