சபரிமலை கோவிலின் மேற்கூரையில் நீர்க்கசிவு| Dinamalar

சபரிமலை : கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் தங்க முலாம் பூசப்பட்ட மேற்கூரையில் ஏற்பட்ட நீர்க்கசிவை சரி செய்யும் பணியில், கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலின் மேற்கூரையை அலங்கரிக்க தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இதில் நேற்று திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டது. இது குறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவிலின் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு நீர்க்கசிவை சரி செய்ய அனுமதி அளித்தார்.
இது தொடர்பாக, தேவசம் போர்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தங்க முலாம் பூசப்பட்ட மேற்கூரையின் ஒரு பகுதியைத் திறந்து, ஆக.3ல் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான் கசிவின் அளவை அறிய முடியும். அதன் பின், சீரமைப்பு பணிகள் நடைபெறும்’ என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.