பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனம் பாராட்டு..

டெல்லி : பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருவதற்கு அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர், இந்தியா ஏற்கனவே 16 மில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கி உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனை வழங்கி இருப்பதற்காக இந்தியாவுக்கு அவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.மேலும் பேசிய அவர், ‘இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனா கொடுத்த  கடனும் ஒரு காரணம். இருக்கும் கடனை அடைக்க அதிக கடன்களை வழங்காமல் ,ஒரு சலுகை காலத்திற்கு ஏற்ப மட்டும் கடனை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தத்தை அமைப்பதே சீனாவிற்கு சிறந்தது. இலங்கை தனது மொத்த கடன் சுமையில் 15 சதவீதத்தை சீனாவுக்கு வழங்க வேண்டிய நிலை உள்ளது. சீனாவின் கடனுதவியில் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பன லாபம் இல்லாத திட்டங்களாக உள்ளது. ஆகவே சீனாவின் நடவடிக்கைகளில் தான் இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் உள்ளது.’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.