வெள்ளவத்தை ,புகையிரத விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு

வெள்ளவத்தையில் நேற்று இரவு (28) ஓடும் ரயிலில் மோதி 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் உயிர்காப்பு பிரிவுக்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புகையிரதம் கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது, புகையிரதத்தில் இரண்டு யுவதிகளும் மோதியதை தொடர்ந்து வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

மேலும் இரண்டு பெண்களும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.