நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில் மின்சாரத் திருத்த மசோதா-வை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது.
இந்த மசோதா மூலம் மின்சாரப் பகிர்மான துறையில் பல முக்கியமான மாற்றங்கள் கொண்ட வரப்படும் காரணத்தால் முக்கியமானதாகவும் மட்டும் அல்லாமல் இப்பிரிவு ஊழியர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்திய மின்சாரத் துறையில் பலவீனமான இணைப்பாக இருக்கும் மின் பகிர்மான துறையை மேம்படுத்தப் போட்டியைச் செயல்படுத்துதல், கட்டண பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை தரகுத்தொகைகளுக்கு அதிக அனுமதியைக் கொடுப்பது தொடர்பான பல மாற்றங்கள் இந்த Electricity Amendment Bill வாயிலாகக் கொண்டு வர மோடி அரசு திட்டமிட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மோடி அரசின் திட்டம் இதுதானா..?
மின்சார விநியோக துறை
மின்சாரத் துறையில் பலவீனமான இணைப்பாக இருக்கும் மின்சார விநியோக துறையை மேம்படுத்தும் வேண்டும் என்ற பெயரில் மின்சார (திருத்த) மசோதா 2022-ஐ அவசர அவசரமாக நுகர்வோர், பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் போன்று இப்பிரிவுக்குத் தொடர்புடையவர்களைக் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு விரைகிறது எனக் குற்றம்சாட்டுகிறது AIPEF அமைப்பு.
AIPEF அமைப்பு
அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு அதாவது AIPEF அமைப்பு மத்திய அரசின் இந்த மின்சார (திருத்த) மசோதா 2022-ஐ எதிர்த்துத் திங்கட்கிழமை தனது உறுப்பினர்களைப் போராட்டத்திற்கு அழைத்த நிலையில் சுமார் மோடி அரசின் மசோதா-வை எதிர்த்து 27 லட்சம் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கேம் சேஞ்சர்
மின் விநியோகத் துறையின் கேம் சேஞ்சராகக் கருதப்படும் இந்த மசோதா, மாநிலங்கள் எழுப்பிய பல கருத்துக்களைக் கொண்டு பல முறை திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதா மூலம் மக்கள் தங்களுக்கான மின் வினியோகஸ்தர்-ஐ தேர்வு செய்யும் வாய்ப்புப் பெறுவார்கள், இதனால் மாநில அரசின் ஒற்றை ஆதிக்கம் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
குறுக்கு மானியங்கள்
AIPEF கூட்டமைப்பு தலைவர் ஷைலேந்திர துபே கூறுகையில், மசோதாவின் விதிகள் குறுக்கு மானியங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை அளிக்கிறது, இதனால் விவசாயிகள் மற்றும் நுகர்வோரை கடுமையாகப் பாதிக்கும்.
விவசாயி
உதாரணமாக இந்த மசோதா மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் ஒரு 7.5 ஹெச்பி பம்பை ஆறு மணி நேரம் இயங்கும் விவசாயி ஒரு மாதத்திற்கு 10-12,000 ரூபாய் பில் செலுத்த வேண்டும். வீட்டு உபயோகிப்பாளர்களும் தங்கள் மின் கட்டணம் உயர்வதைக் காண்பார்கள்.
ஆலோசனை
விவசாயிகளுடன் விவாதிக்காமல் இந்த மின் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த மாட்டோம் என்று கடந்த ஆண்டு விவசாயிகள் அமைப்புக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது, ஆனால் அதைச் செய்யவில்லை என ஷைலேந்திர துபே கூறியுள்ளார்.
மாநிலங்களின் அதிகாரங்கள்
மேலும் AIPEF கூட்டமைப்பு ஊழியர்களின் முக்கியக் கவலை என்னவென்றால், தற்போதைய வடிவத்தில் இந்த மசோதா அறிமுகமானால் மாநிலங்களின் அதிகாரங்களை ஆக்கிரமிக்கும் வகையில் அமையும் என்று ஷைலேந்திர துபே தெரிவித்துள்ளார்.
Modi govt to table Electricity (Amendment) Bill 2022; 27 lakh power sector employees to protest after AIPEF Unions call
Modi govt to table Electricity (Amendment) Bill 2022; 27 lakh power sector employees to protest after AIPEF Unions call மின்சார மசோதா 2022 எதிர்ப்பு.. என்ன பிரச்சனை..? 27 லட்சம் ஊழியர்கள் போராட்டம்..!