தாய்லாந்து நாட்டில் இந்து கோவிலில் ஜெய்சங்கர் சாமி தரிசனம்

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டில் 16-ந் தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்திய தாய்லாந்து கூட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அந்த நாட்டின் துணைப்பிரதமரும், வெளியுறவு மந்திரியுமான டான் பிரமுத்வினயை சந்தித்து பேசினார்.

பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலான தேவஸ்தானத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். இதை அவரே ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர், ” பாங்காக் தேவஸ்தானத்தில் இன்று காலை பிரார்த்தனை செய்தேன். இது நமது பகிரப்பட்ட, மத மற்றும் கலாசார பாரம்பரியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.