முன்விரோதம் காரணமாக முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக் கொலை – 9 பேர் கைது..!

மயிலாடுதுறையில் ஹோட்டலில் சாப்பிட்ட போது நிகழ்ந்த தகராறால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொத்ததெருவைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த 15 நாட்களுக்கு முன் வெளியில் வந்த நிலையில், நேற்றிரவு நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

புதிய பேருந்து நிலையம் அருகே மூவரையும் வழிமறித்த கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். அப்போது உடனிருந்த நண்பர்கள் தப்பியோடிய நிலையில், கண்ணனை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியது.

விசாரணையில், கடந்தாண்டு ஹோட்டலில் சாப்பிட்ட போது ஏற்பட்ட தகராறில் கண்ணன், கதிரவன் என்பவரை தாக்கியதும் இந்த முன்விரோதத்தால் கதிரவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கண்ணனை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சிசிடிவி காட்சி உதவியுடன் கதிரவன் உட்பட 9 பேரை கைது செய்த போலீசார், 10க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் மயிலாடுதுறையில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.