ஆடம்பர பங்களாவில் குடியேறிய நட்சத்திர தம்பதி; அமர்களமாக நடைபெற்ற கிரஹபிரவேசம்

பாலிவுட் உலகில் பிரபல நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், மும்பை அருகே உள்ள கடற்கரை நகரமான அலிபாக்கில் ஆடம்பரமான பங்களா ஒன்றை வாங்கியுள்ளனர். கிம் பீச் அருகே வாங்கப்பட்டுள்ள பங்களா, 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. சுமார் ரூ.119 கோடிக்கு இந்தப் பங்களாவை ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதி வாங்கியிருக்கிறது. வீடு வாங்கிய பின்னர் தடபுடலாக பராமரிப்பு மற்றும் ஆல்ட்ரேஷன் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அந்த வீட்டில் குடி புகுந்துள்ளது நட்சத்திர தம்பதி.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் புது வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெற்றுள்ளது. இந்த புதுமனை புகு விழாவில் நடிகர் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டு இருக்கின்றனர். ரன்வீர் சிங், புதுமணை புகுவிழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தங்களின் முகத்தை ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் காண்பிக்கவில்லை. மாறாக, புதுமணை புகுவிழாவின் பூஜை செய்யும் புகைப்படங்களை மட்டும் பதிவு செய்திருக்கிறார்.

இந்திய திரைப்பட நட்சத்திர தம்பதிகள் அதிக விலை கொடுத்து வாங்கிய வீடாக இது பார்க்கப்படுகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 16, 17, 18 மற்றும் 19வது மாடிகளை இணைத்து புதிய வீடு கட்டப்பட்டிருக்கிறது. மொத்த பரபரப்பளவு மட்டும் 11, 266 சதுர அடி எனக் கூறப்படுகிறது. மொத்தம் 19 கார்களை இங்கு நிறுத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. தீபிகா படுகோன் வசிக்கும் இதே வீதியில் ஷாருக்கானின் வீடும் அமைந்திருக்கிறது. ரன்வீர் சிங் தற்போது சர்க்ஸ் (Cirkus) படத்தின் ரிலீஸூக்காக காத்திருக்கிறார். தீபிகா படுகோன், ஷாகூன் பத்திராவின் கெகிரியான் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.