தள்ளுவண்டியில் நோயாளி வீடியோ; 3 பத்திரிகையாளர்கள் மீது வழக்கு

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான பிரசாத் விஸ்வகர்மாவை, தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோவை மூன்று உள்ளூர் பத்திரிகையாளர்கள் பகிர்ந்துள்ளனர். அதில், 108 அவசர கால ஆம்புலன்சுக்கு போன் செய்தும், அவர்கள் நோயாளியை அழைத்து செல்ல வரவில்லை என்றும், அதனால் நோயாளியை தள்ளுவண்டியில் 5 கிமீ தூரம் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சதீஷ் குமாரின் நேரடி விசாரணையில், ஆம்புலன்சுக்கு எவ்வித போன் அழைப்பும் கொடுக்கவில்லை என்றும், தவறாக தகவலை சிலர் பரப்பியது தெரியவந்தது. அதையடுத்து உள்ளூர் பத்திரிகையாளர்கள் 3 பேர் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.