பெண்ணுக்கு கத்தி குத்து வாலிபர் தற்கொலை முயற்சி| Dinamalar

ராம்நகர் : காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.ராம்நகர், சென்னபட்டணாவின், கோட்டை லே — அவுட்டின், வரதராஜ சுவாமி கோவில் அருகில் வசிக்கும் மேகனா, 20 என்ற பெண், மொபைல் போன் ஷோ ரூம் ஒன்றில் பணியாற்றுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே ஷோரூமில் வெங்கடேஷ், 27, பணியாற்றினார்.

மேகனாவை ஒரு தலையாக காதலித்த வெங்கடேஷ், பல முறை தன் காதலை வெளிப்படுத்தினார். அவர் மறுத்தும் விடாமல் தொந்தரவு கொடுத்தார். இதனால் தொல்லை தாங்காமல், சமீபத்தில் மேகனா வேலையை விட்டு விட்டு, பெங்களூரின் நகைக்கடையில் பணிக்கு சேர்ந்தார்.இந்நிலையில் மேகனா, சென்னபட்டணா வீட்டுக்கு வந்துள்ள தகவல், வெங்கடேஷுக்கு தெரிந்தது. அங்கு சென்ற அவர், மேகனாவை கத்தியால் குத்தி விட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.