லண்டனில் உள்ள பௌத்த விகாரையில் ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டார்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், லண்டனில் உள்ள பௌத்த விகாரைக்கு நேற்று (20) பிற்பகல் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் பிரதம சங்கநாயக்க கலாநிதி போகொட சீலவிமல தேரர் அவர்களை சந்தித்த ஜனாதிபதி , அவரின் நலம் விசாரித்ததோடு, சுமூக கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார். இதன்போது ஜனாதிபதிக்காக மத வழிபாடு நடத்தப்பட்டு ஆசி வழங்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
21.09.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.