சூரிய மின் சக்தி திட்டத்துக்குரூ.19 ஆயிரம் கோடி மானியம்| Dinamalar

”உயர் திறன் சூரிய மின் சக்தி மின்சார உற்பத்தி திட்டத்துக்கு, 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,” என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறினார்.மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுடில்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:உயர் திறன் கொண்ட சூரிய மின்சார உற்பத்தி திட்டத்துக்கு, 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக, ஆண்டுக்கு 65 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, 1.95 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக 7.88 லட்சம் பேருக்கும் வேலை கிடைக்கும்.இதேபோல் அடுத்த ஐந்து ஆண்டுகளில், ‘செமி கண்டக்டர்’ எனப்படும் மின்னணு உபகரண உற்பத்தியில், 76 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்த தேசிய தளவாடக் கொள்கைக்கும், அமைச்சரவையின் நேற்றைய கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

– நமது சிறப்பு நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.