திரிபுராவில் பாஜ எம்எல்ஏ திடீர் விலகல்

அகர்தலா: திரிபுராவில் பாஜ தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பாஜவை சேர்ந்த எம்எல்ஏ பர்பா ேமாகன் ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கர்பூக் தொகுதியில்வெற்றி பெற்ற இவர், சபாநாயகர் ரத்தன் சக்ரவர்த்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதனால், பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. திரிபுராவில் கடந்த 4 ஆண்டுகளில் பாஜ.வில் இருந்து வெளியேறும் 4வது எம்எல்ஏ இவராவார். இவர் திப்ரா மோதா கட்சியுடன் இணைந்து செயல்பட இருப்பதாக, இக்கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.