நடிகர் போண்டாமணிக்கு வடிவேலு கொடுத்த வாக்குறுதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு சுவாமி  தரிசனம் மேற்கொண்டார்.  நான் தற்போது  நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் விரும்பும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என பேட்டி அளித்துள்ளார்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு சுவாமி  தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது, தொடர்ந்து கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டார். அதனை தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

“நான் தற்போது நடித்து வரபோகிற படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும், தற்போது நாய் சேகர் ரிட்டன், மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து வருவதாகவும், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்  உதயநிதி  ஸ்டாலின் உடன் நடித்து வரும் மாமன்னன் திரைபடம் நன்றாக வந்திருப்பதாகவும்,  படத்தில் தான் குணசித்திர நடிகனாக நடித்து இருப்பதாகவும் கூறினார்.  என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து  நடிக்க இயலவில்லை.  

தற்போது தான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.  தற்போது நடித்துள்ள நாய் சேகர் படத்தில் பாடல் பாடியுள்ளதாகவும், அப்பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்றும் தெரிவித்தார். உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன்” என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.