காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை| Dinamalar

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் இருவரை, ராணுவத்தினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில், ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு – காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் டெக்ரி நார், மாச்சல் செக்டார் பகுதிக்குள் நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். பயங்கரவாதிகளும் திருப்பி தாக்கினர்.இந்த சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.