“சிறைகளில் தன்பாலின ஈர்ப்பு வன்கொடுமைகள் அதிகம் நடப்பது கவலையளிக்கிறது!" – உச்ச நீதிமன்றம்

சிறைச்சாலைகளில் தன்பாலின ஈர்ப்பும், தன்பாலின வன்கொடுமைகளும் அதிக அளவில் நடப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். கே.எம்.பீமா கோரேகான் வழக்கில் சிறையிலிருக்கும் கவுதம் நவ்லகா என்பவரை உடனடியாக மும்பையின் ஜஸ்லோக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றுமாறு தலோஜா சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, நவ்லகா `மீண்டும் சிறைக்கு அனுப்பாமல், சிறையிலிருந்து வெளியே செல்ல வேண்டும்’ எனவும், அதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்கவும் உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்கான காரணமாக சிறையில் … Read more

“தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு அளித்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கை இதுதானோ?” – தினகரன் காட்டம்

சென்னை: “தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ?” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தரமற்ற பொங்கல் … Read more

ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். ஆப்கானிதானின் தலைநகர் காபூலில் மேற்குப் பகுதியில் கல்வி நிறுவனம் அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர் பலியாகினர். 20-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தேர்வுக்காக மாணவர்கள் படித்து கொண்டிருந்தபோது இந்தக் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பலியானவர்களில் பலரும் மாணவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். … Read more

ஒன்பது மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (30.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01.10.2022: தமிழ்நாடு, … Read more

'ரூ. 25 கோடி' கத்தை கத்தையாக கள்ளநோட்டு – குஜராத் தேர்தலுக்கா அல்லது சினிமாவுக்கா?

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் பிரச்சாரப் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும், போலீசாரும் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் கள்ள நோட்டு புழக்கம் தற்போது அதிகமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த வகையில், ரூ. 25 கோடி கள்ள நோட்டுகளை குஜராத் போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.  சூரத் நகரில் அகமதாபாத் – … Read more

பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க பலர் முயற்சி செய்து வந்தனர், எம்ஜிஆர் தொடங்கி கமல், ரஜினி என திரையுலகில் மூத்தவர்கள் அனைவரும் முயற்சி செய்த நிலையில் பலன் அளிக்கவில்லை. இதனை நான் எடுத்து முடிக்கிறேன் என்ற சபதத்தில் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார், முதல் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் நாள் புக்கிங் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்தது. … Read more

பொன்னியின் செல்வன்: `இயற்கை ஓவியத்தில் முக்கிய கேரக்டர்கள்' – இப்படியும் ஒரு கொண்டாட்டம்!

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் முக்கிய கேரக்டர்களை கதர் துணியில் இயற்கையான சாயத்தைக் கொண்டு வரைந்து பெருமை சேர்த்துள்ளார் மதுரையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் கிருத்திகா. கிருத்திகா மதுரை அனுப்பானடியில் வசிக்கும் கிருத்திகா, ஃபேஷன் டெக்னாலஜி படித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் படித்துக் கொண்டிருக்கும்போதே காபி ஓவியம் உள்ளிட்ட வித்தியாசமான ஓவியங்களை வரைந்து ரிகார்ட்ஸ்களில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் … Read more

சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய தலைமை நீதிபதியாக ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் நியமனம்!

சென்னை: சென்னை உயர்நீதி மன்றதிற்கு புதிய தலைமை நீதிபதியாக ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நீதிபதி துரைசாமி பதவிக்காலம் அண்மையில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, உச்சநீதிமான்ற கொலிஜியம் ஒடிசா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்தது. இதை ஏற்று குடியரசு தலைவர் முரளிதரை அதிகாரபூர்வமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய நீதிபதியாக வர … Read more

குன்னூரில் தொழிற்சாலையில் புகுந்து 2 கிலோ சாக்லேட்டை ருசி பார்த்த கரடி

குன்னூர்:  குன்னூரில் நேற்று அதிகாலை ஹோம் மேட் சாக்லேட் தொழிற்சாலையில் புகுந்த கரடி, 2 கிலோ சாக்லேட்டை சாப்பிட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு மற்றும் கோவில்களில் உள்ள விளக்குகளில் ஊற்றும் எண்ணெய்யை குடிக்கவும் வருகின்றன. நேற்று அதிகாலை குன்னூர் அருகே உள்ள ஹைபீல்டு சாக்லேட் தொழிற்சாலை பகுதிக்கு … Read more

தாஜ்மஹாலை விட அதிக வெளிநாட்டு பயணிகளை ஈர்த்த மாமல்லபுரம்

சென்னை: கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின் திறக்கப்பட்ட சுற்றுலா தளங்களில் தாஜ்மஹாலை விட மாமல்லபுரத்தை அதிகமான வெளிநாட்டு பயணிகள் கண்டு ரசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 38,992 பேர் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ள நிலையில் 1,44,984 பேர் மாமல்லபுரத்தை கண்டு களித்துள்ளனர்.