ஓ.பன்னீர்செல்வம் கையில் அதிமுக – எடப்பாடி பழனிசாமி டென்ஷன்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதில், தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவை கைப்பற்ற

– எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒரு வழியாக, ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு விட்டார். எனினும் இதை ஓ.பன்னீர்செல்வம் ஏற்க மறுத்து வருகிறார். ஒரு பக்கம், எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடிக்கிறார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதுவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. எனினும் இந்த விவகாரத்தில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த ஏன் இவ்வளவு அவசரம் என கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, வழக்கு விசாரணை முடியும் தேர்தலை நடத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் திடீரென்று பல்டி அடித்துள்ளது. இது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அடுத்த விசாரணையின் போது, மேலும் வலுவான வாதங்களை எடுத்து வைக்க, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டு உள்ளது.

முதற்கட்டமாக, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு செக் வைத்துள்ளதாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மேலும், விரைவில், ஓ.பன்னீர்செல்வம் கைக்கு அதிமுக வரும் என்றும் அவர்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, தொண்டர்கள் கையெழுத்துடன் கூடிய பிரமாணப் பத்திரங்களை, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

முடிந்தவரை, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க, ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுக, யாருடைய தலைமையில் இயங்கப் போகிறது என்பது, புரியாத புதிராக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.