நவராத்திரி குறித்து சர்ச்சை கருத்து: பல்கலை. பேராசிரியர் டிஸ்மிஸ்| Dinamalar

வாரணாசி: உ.பி.யில் நவராத்திரி பண்டிகை குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பல்கலை. கவுர பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

உ.பி.மாநிலம் வாரணாசியில், மகாத்மா காந்தி,காஸி வித்யாபீடம் என்ற பல்கலை.யில் அரசியல் அறிவியல் துறை கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் மிதிலேஷ் குமார் கவுதம், கடந்த செப்.29-ம் தேதி சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்தை பதிவேற்றினார். அதில் நவராத்திரி விழாவின் 9 நாட்களில் பெண்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ஹிந்து சட்டத்தையும் படிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பேராசிரியரின் இந்த கருத்து ஹிந்துக்களையும் ஹிந்து பண்டிகையை அவமதிப்பதாக புகார் எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் பேராசிரியரின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பல்கலை. நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்ததுடன், அவர் எக்காரணம் கொண்டும் பல்கலை. வளாகத்திற்குள் நுழையக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.