மின்தடை – நள்ளிரவு பொதுமக்கள் சாலை மறியல்!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடர் மின் தடை காரணமாக நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர் மின் தடை நிலவி வருகிறது.

புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி அரசின் இந்த முடிவை கண்டித்து, காரைக்கால் மாவட்ட மின் துறை ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் தொடர் மின் தடை ஏற்பட்டது. இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.