வானொலியில் இந்தி திணிப்பு முயற்சி ரத்து: ராமதாஸ் வரவேற்பு!

அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த 2ஆம் தேதி முதல் தினமும் 4 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்தது. தமிழ் நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டு இந்தியை திணிக்கும் செயல் என

நிறுவனர்

கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்தி நிகழ்ச்சிகளை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது இந்தி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் இதை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ”அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி முதல் தினமும் 4 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்த இந்தி நிகழ்ச்சிகள் நேற்றிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தித் திணிப்பை பிரசார் பாரதி நிறுவனம் கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

காரைக்கால் வானொலி மூலமான இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது கைவிடப்படாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து இந்தி நிகழ்ச்சிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். இதை உணர்ந்து இனி வரும் காலங்களில் இந்தித் திணிப்பு முயற்சிகளில் பிரசார் பாரதி நிறுவனம் ஈடுபடக்கூடாது” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.