சிக்கி தவிக்கும் தமிழிசை; பாஜக பிரமுகரால் வந்த வினை!

கடன் வழங்கும் செயலிகளின் மோசடி நாளுக்கு நாள் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், அவசர தேவைக்காக பலரும் ஆபத்தை உணராமல் ஆப்பில் கடன் பெறுகின்றனர்.

இந்த கடனை குறிப்பிட்ட நாளில் திரும்பவும் செலுத்தாவிட்டால் அவர்களது மொபைலை ஹேக் செய்து அந்த நபர் மற்றும் அவர்களது மொபைலில் உள்ள புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவர்களுடைய உறவினர்களுக்கு அனுப்பி வைத்து அதிக அளவில் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உருவப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, லோன் ஆப் மோசடி கும்பல் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் டெல்லி கோபி (43). பாஜ முன்னாள் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தலைவராக உள்ளார்.

கடந்த 4ம் தேதி டெல்லி கோபி கடன் செயலில் மூலம் ரூ.5 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். கடன் தேதி நேற்றுடன் முடிந்து ஒரு நாள் காலதாமதம் ஆகிய காரணத்தினால் அவரது தொலைபேசி முழுவதும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும், உடனே பாஜவில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய பிரமுகருடன் இருந்த டெல்லி கோபியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல், டெல்லி கோபி தேடப்படும் குற்றவாளி என்று பதிவு செய்து, டெல்லி கோபியின் தொலைபேசியில் இருக்கும் அனைத்து தொடர்பு எண்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்த கும்பல் புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் படத்தையும் ஆபாசமாக சித்தரித்து, புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கோபி உடனே விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில், போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜ பிரமுகர் வாங்கிய கடனுக்காக தமிழிசை சௌந்தரராஜன் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட சம்பவம், காவல் துறை மற்றும் அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் உறைய செய்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.