விபத்தில் சிக்கிய முதல்வர் பயணித்த படகு… பிகாரில் பரபரப்பு!

பீகார் மாநில தலைநகர் பாட்னா அருகே கங்கை நதியில் சாத் பூஜை நடைபெற உள்ளது. இதனையடுத்து பூஜை நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அதிகாரிகள் ஒரு படகில் பயணித்து கொண்டிருந்தனர்.

கங்கை நதியில் பயணித்து கொண்டே சாத்காட் பகுதியில் அவர்கள் படகில் இருந்தபடி ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று படகு நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தி் தூணில் மோதியது.

படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தில் படகு லேசாக சேதம் அடைந்தது. ஆயினும் நல்வாய்ப்பாக முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அதிகாரிகள் காயம் ஏதுமின்றி தப்பினர். அதன்பின் மற்றொரு படகில் சென்று அவர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டனர்..

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிகார் மாநில மக்கள் ஆண்டுதோறும் கடைபிடிக்கும் சாத் பூஜை இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி வருகிறது. இந்த பூஜையொட்டி விரதமிருக்கும் மக்கள், கங்கை நீரில் புனித நீராடி விரதத்தை முடிப்பது வழக்கம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.