சிஇஓ பராக் அக்ரவால் அவுட்… ட்விட்டரை வசப்படுத்திய எலான் மாஸ்க்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். அமெரிக்காவின் பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். இவர் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கப் போவதாக கடந்த பல வாரங்களாக பேச்சு அடிபட்டு வருகிறது. கடைசியாக 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், அதில் எலான் மாஸ்க் கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஒருவேளை டீலில் இருந்து வெளியேறி விட்டாரா? ட்விட்டரை வாங்க மாட்டாரா? என்றெல்லாம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் டீலை முடிக்க வேண்டும். இல்லையெனில் வேண்டாம் என தெளிவாக கூறிவிட வேண்டும் என்று ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் கொந்தளித்தனர். வழக்கு போடுவதாக எச்சரிக்கையும் விடப்பட்டது. இதற்கிடையில் ட்விட்டரில் பொய்யான கணக்குகள், Bot கணக்குகள் விஷயத்தில் இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் வெடித்தது.

ரிஷி சுனக்… அந்தப் பெருமை பேசறதுலாம் ஓகே… அவரால இந்தியாவுக்கு என்ன லாபம்?

இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் அமெரிக்க பங்குச்சந்தையில் எதிரொலிக்க ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் சரிந்தன. அதன்பிறகு சமாதானம் அடைந்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மாஸ்க் ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து திடீரென அதிரி புதிரியான சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அதாவது, 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் எலான் மாஸ்க் கையெழுத்து போட்டுவிட்டார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் Bio-வில் Chief Twit என்று மாற்றம் செய்துள்ளார். Place என்ற இடத்தில் Twitter HQ எனப் பதிவிட்டு தலைமையகத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். உடனே ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்தே நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இவர்கள் அனைவரும் ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக பரபரப்பான தகவல்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் வசித்து வந்த பராக் அக்ரவால் ட்விட்டரில் 2011ஆம் ஆண்டு இணைந்து படிப்படியாக உயர்ந்து சிஇஓ பதவியை அடைந்தார்.

பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா… இப்டியொரு தோல்வியை எதிர்பார்க்கல!

பராக் அக்ரவால் கொண்டு வந்த மாற்றங்களால் ட்விட்டர் வேற லெவல் முன்னேற்றத்தை அடைந்ததாக கூறப்படும் நிலையில், அவரை நீக்கியது சர்ச்சையாகியுள்ளது. இந்த சூழலில் எலான் மாஸ்க் வருகையால் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.

ஏனெனில் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் பலரை வேலையில் இருந்து தூக்கப் போவதாக கூறியிருக்கிறார். இதனால் பெரும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அந்நிறுவனத்தையே வாங்கிய பிறகு, ஊழியர்கள் எதிர்ப்பை காட்டி என்ன செய்ய முடியும்? என்பது தான் கேள்வியாக முன்வந்து நிற்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.