விதிமீறல் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்: ஐகோர்ட் கேள்வி

சென்னை: விதிமீறல் கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன் என்று  ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. விஜயபாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை மாநரகராட்சிக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியது. கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. கட்டிடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார்? காவல்துறை அதிகாரிகள் யார் என்று நீதிபதிக்கள் கேள்வி கேட்டுள்ளனர்.  விவரங்களை சேகரித்து நவ – 7-ம் தேதி தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஆணையருக்கு உயர்நிதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.