புதுடில்லி, பண மோசடி தொடர்பான வழக்கில், உத்தர பிரதேசத்தின் பிரபல தாதா முக்தார் அன்சாரியின் மகனும், எம்.எல்.ஏ.,வுமான அப்பாஸ் அன்சாரி, 30, கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தாதா, முக்தார் அன்சாரி, ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உட்பட பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் அவர் மற்றும் அவருடைய குடும்பத்தார் செய்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. தற்போது உத்தர பிரதேசத்தின் பாண்டா சிறையில் முக்தார் அன்சாரி அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, அவருடைய மகனும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வுமான அப்பாஸ் அன்சாரியிடம், அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement