கெர்சன் நகரம் எங்களுடையது என உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்
கெர்சன் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக செய்தி பரவியவுடன், நாடு முழுவதும் உக்ரேனியர்கள் கொண்டாடி வருகின்றனர்
கெர்சன் நகரம் மீண்டும் உக்ரேனியர்களின் கைகளுக்கு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
ரஷ்ய படைகள் கெர்சனில் இருந்து பின் வாங்கிய நிலையில், கெர்சன் நகரம் இனி எங்களுடையது என உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்ததுடன், அந்நகர மக்களை வெகுவாக பாராட்டினார்.
ஜெலென்ஸ்கி ஆற்றிய உரையில், ‘இன்று ஒரு வரலாற்று நாள், நம் நாட்டின் தெற்கிற்கு நாம் திரும்புகிறோம், கெர்சனுக்கு திரும்புகிறோம்.
ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் இருந்தபோதிலும், உக்ரைனில் நம்பிக்கை வைத்துள்ளோம்‘ என தெரிவித்தார்.
AP
அதனைத் தொடர்ந்து உக்ரேனிய மக்கள் கையில் கொடியை ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உக்ரேனிய படை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு நிறுவனமானது, கெர்சன் உக்ரேனிய கட்டுப்பாட்டிற்கு மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், மீதமுள்ள ரஷ்ய துருப்புக்கள் நகரத்திற்குள் நுழையும் கீவ்வின் படைகளிடம் சரணடையுமாறும் உத்தரவிட்டது.