சரக்கு விண்கலம் பயணம் சீனாவின் முயற்சி வெற்றி| Dinamalar

பீஜிங், விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக ஏவியது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தலைமையில், விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.

இந்நிலையில், நம் அண்டை நாடான சீனா, விண்வெளியில் தனக்கென தனியாக ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை சீனா ஏற்கனவே அனுப்பி வைத்து உள்ளது.இதன் ஒரு பகுதியாக, ஆய்வு மையத்துக்குதேவையான பொருட்களுடன் கூடிய சரக்கு விண்கலம் நேற்று ஏவப்பட்டது.

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, இந்த விண்கலத்தை ஏந்தி, ‘லாங் மார்ச் ௭ – ஒய் ௬’ என்ற ராக்கெட் நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக, சீன விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துஉள்ளது.இந்தாண்டு இறுதிக்குள், சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் செயல்படத் துவங்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையம் அடுத்த சில ஆண்டுகளில் தன் ஆயுட்காலத்தை நிறைவு செய்ய உள்ளது. இதன்பின், சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் மட்டுமே செயல்படும்சூழ்நிலை உருவாகும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.