ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல்… மாநில அரசுகளை கைக்காட்டும் மத்திய அமைச்சர்!

ஒரே நாடு ஒரே வரி என்ற மத்திய பாஜக அரசின் கொள்கையின்படி, நாடு முழுவதும் தற்போது சரக்கு மற்றும் சேவை வரி (
GST
)அமலில் உள்ளது. அதில் நூற்றுக்கணக்கான பொருட்களும், பல்வேறு வகையான சேவைகளுக்கான வரிகள் மொத்தமாய்
ஜிஎஸ்டி
வரம்புக்குள் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களிடம வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இதுநாள்வரை, அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல். டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படாது ஏன் என்ற கேள்வி பலதரப்பிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்த கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் மாநில அரசுகள் ஒத்துழைத்தால் எரிப்பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நாங்கள் ரெடி என்று ரெடிமேடான பதிலை மத்திய அரசு சொல்லி வருகிறது

.

இதே பதிலைதான் தற்போது பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி தெரிவித்துள்ளார். மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளித்தால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார். மாநில அரசுகள் இதற்கு இசைவு அளித்தால், அதனை மத்திய நிதியமைச்சகம் செயல்படுத்த தயாராக உள்ளது என்று அமைச்சர் ஹர்தீப்சிங்புரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே ஆட்சி புரிந்துவரும் நிலையில், மாநில அரசுகள் ஒத்துழைத்தால் பெட்ரோல். டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தயார் என்று மத்திய அரசு திரும்ப, திரும்ப கூறி வருவதால், மாநில பாஜக அரசுகளே இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.