தொழில்நுட்பப் பரீட்சைக்கு (GIT) விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பபரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 25 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி பயின்ற மாணவர்கள் மாத்திரமே, இப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும், பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்து விண்ணப்பங்களும்; கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனவும், விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட விதத்தில் இந்தப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது எனவும், பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 2022 (2023) உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில், இந்தப் பரீட்சை நடாத்தப்பட மாட்டாது. இப்பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.