சென்னை: அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்ததாக வந்த புகாருக்கு முகாந்திரம் உள்ளது என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக திருவாரூரை சேர்ந்த ராஜசேகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அனுமதிக்கப்பட்ட பரப்பளவை விட குறைவான அளவில் முறைகேடாக கட்டிடம் கட்டியதில் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.