புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு சஞ்சய் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்தவுடன் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக பழனிச்சாமியின் தம்பி இளையராஜா இரு சக்கர வாகனத்தில் காத்திருந்தார்.
பின்னர் அவர்களை ஏற்றிக் கொண்டு பறையத்தூர் அருகே சென்ற போது மழையுடன் மின்னல் தாக்கியது.