ஈரானில் 5 பேர் சுட்டுக்கொலை| Dinamalar

டெஹ்ரான்,:ஈரானில் கடைவீதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிறுமி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

மேற்காசிய நாடான ஈரானில் ‘ஹிஜாப்’ எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணி அணிவதற்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மற்றும் பழமைவாதிகள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது.

இந்நிலையில், ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள இசே நகரில் உள்ள கடைவீதியில் நேற்று முன் தினம் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், பைக்கில் வந்த சிலர், பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.இந்த தாக்குதலில் ஒரு சிறுமி, ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் என ஐந்து பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியது யார், எதற்காக சுட்டனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.