பள்ளிகளில் மாணவிகளுக்கு கவுன்சலிங் வழங்க வேண்டும்

மதுரை: மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் அமைத்து கவுன்சலிங் அளிப்பது தொடர்பாக கடந்த 2012ல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணைப்படி நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், ‘‘அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் மூலம் கவுன்சலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.