ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்த நபர் ‘போக்சோ’ வழக்கு குற்றவாளி என தகவல்..!

திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்த நபர், பாலியல் வன்கொடுமை புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சத்யேந்தர் ஜெயின் சிறையில் மசாஜ் செய்வதுபோன்ற வீடியோ வெளியான நிலையில், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக, துணை முதல்வர் மணிஷ் சிசியோடியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மசாஜ் செய்தவரின் பெயர் ரிங்கு என்றும், போக்சோ வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், சத்யேந்தர் ஜெயினின் அறைக்கு அருகே உள்ள வார்டில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் சிறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.