சிபிஐ அதிகாரி என போலி அடையாள அட்டை வைத்திருந்த நபர் கைது..!

திருப்பூரில் சிபிஐ அதிகாரி என போலி அடையாள அட்டை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

பவானி நகரில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரியான ராசையா என்பவர்  மத்திய குற்ற புலனாய்வு துறை என்ற  அடையாள அட்டை வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில்  அங்கு சென்ற திருப்பூர் வடக்கு குற்ற பிரிவு போலீசார் ராசையாவை பிடித்து விசாரித்த போது,  போலியான அடையாள அட்டை வைத்திருந்ததும், மேலும் 2 நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான அடையாள அட்டை வழங்கியதும் தெரிய வந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.