மெட்ரோ ரயிலில் சுத்தம் செய்த இளைஞருக்கு குவியும் பாராட்டு!!

டெல்லி மெட்ரோ ரயிலில் கீழே சிந்திய உணவை சுத்தம் செய்த மாணவனுக்கு பாராட்டு குவிகிறது.

பயணம் செய்து கொண்டிருந்த மாணவன் ஒருவன் தனது பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வெளியே எடுக்கும் போது தவறுதலாக டிபன் பாக்ஸ் கிழே விழுந்து, அதில் இருந்த உணவு மொத்தமும் தரையில் கொட்டியது.

உடனடியாத தனது நோட்டு புத்தகத்தில் இருந்து ஒரு தாளை கிழித்து கீழே கொட்டிய உணவை அள்ளி எடுத்துள்ளான். பின்னர் தனது கைக்குட்டையைக் கொண்டு அந்த இடத்தை நன்றாக துடைத்து சுத்தமாக்கி உள்ளான்.

மாணவனின் இந்த செயலை அங்கிருந்த சிலர் புகைப்படமாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

அதோடு சம்பந்தப்பட்ட மாணவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமூக அக்கறை என்பது இது போன்ற செயல்கள் மூலம் தான் நிகழும் என்றும், இது போன்ற செயல்களை பகிர்வதன் மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.