சூதாட்டத்தில் தன்னையே இழந்த பெண் 2 குழந்தைகளுடன் கணவர் தவிப்பு| Dinamalar

பிரதாப்கர் :உத்தர பிரதேசத்தில், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண், சூதாட்டத்தில் தன்னையே பணயம் வைத்து விளையாடி தோற்று வீட்டு, உரிமையாளருடன் வசிக்கத் துவங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.,யின் நாகர் கோட்வாலி மாவட்டம் பிரதாப்கரில் வாடகை வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வசிப்பவர் ரேணு. இவரது கணவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வேலை செய்கிறார்.

வீட்டு உரிமையாளருடன் பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடத் துவங்கிய ரேணு, நாளடைவில் பணம் வைத்து விளையாட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் இதற்கு அடிமையாகி விட்டார். கணவன் மாதந்தோறும் அனுப்பும் பணத்தை எல்லாம், ரேணு சீட்டு விளையாட்டுக்கே செலவழித்தார்.

அவர் கடந்த வாரம் விளையாடி அனைத்து பணத்தையும் இழந்த நிலையில், திடீரென, தன்னையே பணயம் வைத்து விளையாடுவதாக கூறினார். இதை, வீட்டு உரிமையாளரும் ஏற்றார். ஆனால், இதிலும் ரேணு தோற்று விட்டார்.

இதையடுத்து, ரேணு வீட்டு உரிமையாளருடன் வசிக்கத் துவங்கி விட்டார்.

இந்தத் தகவலை ஜெய்ப்பூரில் இருக்கும் தன் கணவருக்கு தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர், பதறியடித்து ஊருக்கு வந்து போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையை துவக்கிஉள்ளனர்.

தற்போது, இரண்டு குழந்தைகளுடன் தனியாக தவிக்கும் அவர், இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டு நியாயம் கேட்டுள்ளார். இவரது பதிவை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.