விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இதற்கிடையில் அண்ணன் தம்பிகள் தற்போது பண பிரச்சனை காரணமாக கதிர், முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வந்தார், னியாக இருந்த முல்லையும், கதிரும் சமையல் போட்டியில் சிறப்பாக விளையாடி பத்து லட்சம் ரூபாய் பணத்தை வென்று தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். இதை அறிந்த மீனாவின் அப்பா கிண்டல் கேலி செய்கிறார். இதனால் மூர்த்தி குடும்பத்துக்கும் மீனாவின் அப்பா ஜனார்தனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.
சண்டை வளந்துக் கொண்டே போனதால் ஜனார்தன் மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வந்து கதிரின் வீட்டிற்கு செல்கிறார்கள். பின்னர் மூர்த்தியின் மொத்த குடும்பமும் தாங்கள் வீடு கட்டும் இடத்தை ரிஜிஸ்டர் செய்து விடுகிறார்கள். மேலும், குடும்பம் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார்கள்.
இந்த நிலையில் திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முக்கிய நடிகை வெளியேறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மீனாவின் தங்கையாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாறியுள்ளார். அதன்படி ஐஸ்வர்யா தான் அவருக்கு பதில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்புதான் தற்போது வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யாவும் ஏற்கனவே நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.