வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்

பாராளுமன்றத்தினால் டிசம்பர் 06 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) சபையில் அறிவித்தார்.

இதற்கமைய, கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ காமினி லொக்குகே, கௌரவ சம்பத் அதுகோரல,      கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு, கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி, கௌரவ யதாமிணீ குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.