உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் உடல்கள் மீட்பு..!!

நீலகிரி: உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பெண் பக்தர்களில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. சீகூர் வனப்பகுதியில் ஆனிக்கல் மாரியம்மன் கோயிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. கோயில் தீப திருவிழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள் ஆற்றை கடக்க முற்பட்டபோது, திடீரென காட்டாற்று வெள்ளம் வந்தது. ஜெக்கலொரை கிராமத்தைச் சேர்ந்த சரோஜா (65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 பேரில் 2 பேர் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.