பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் – 4 போலீசார் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்ட்டுங்க்வா மாகாணத்தின் தெற்கு வாரிஸ்தான் மாவட்டதில் லாகி மர்வத் என்ற பகுதியில், காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கையெறி வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரீப் அல்வி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.