2வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா ? – கே.எல்.ராகுல் பதில்

சாட்டிங்காம்,

இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடேயேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14 ந் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக கே.எல் .ராகுல் செயல்பட்டார்.வங்காளதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியிலும், அதன்பின் 1வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகினார் .

இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு கே.எல். ராகுல் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது .

அடுத்த ஓரிரு நாட்களில் தான் ரோகித் சர்மாவின் நிலையை நாம் அறிய முடியும், என தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.