பம்பை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரும் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் ஆன்லைன் பதிவு சரியாக உள்ளதா என சோதனை நடைபெறுகிறது. பம்பை கன்னிமூல கணபதி கோயில் அருகே சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதி செய்யப்படுகின்றனர்.