பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாவதால் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கின்றது. விஜய் மற்றும் வம்சியின் கூட்டணியில் உருவாகும் முதல் படம் தான் வாரிசு. மேலும் ராஷ்மிகா, தமன் என விஜய் புது கூட்டணியுடன் இம்முறை களமிறங்குவதால் ரசிகர்கள் இப்படத்தை காண ஆவலாக உள்ளனர்.
மேலும் இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் சற்று வித்யாசமாக இருக்கும் என்ற தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
Varisu: மீண்டும் அஜித்தை சீண்டிய வாரிசு தயாரிப்பாளர்..விளாசும் அஜித் ரசிகர்கள்..!
இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து விஜய் மேடையில் தோன்றியதால் ரசிகர்கள் தலைகால் புரியாமல் தளபதியை கண்டு ஆர்ப்பரித்தனர்.
மறுபடியும் போலீஸ் கேரக்டர் ஏன்? Aakrosham Movie Team Interview
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
விஜய்யோ எப்போதும் போல எளிமையாக அதே சமயத்தில் செம ஸ்டைலிஷாக வந்தார். அவரின் குட்டி ஸ்டோரி தற்போது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகின்றது. ஆனால் பலரும் அவர் அரசியல் பற்றி பேசுவார் என எதிர்பார்த்தனர். அவர்களுக்கு மற்றும் சற்று ஏமாற்றமே மிஞ்சியது.
விஜய் அரசியல் பேசாது இருந்தது அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த விழாவில் படத்தின் நாயகி ராஷ்மிகா பேசுகையில் தான் எப்போதிலிருந்து விஜய் ரசிகையானேன் என கூறினார்.
அவர் கூறியதாவது, நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது நானும் என் அப்பாவும் கில்லி படத்தின் FDFS பார்க்க சென்றோம். அந்த படத்தை பார்த்ததில் இருந்து நான் விஜய்யை பின்பற்ற துவங்கினேன். அவரை போலவே வீட்டில் நடந்துகொள்ள முயற்சிப்பேன். அந்த படத்திலிருந்து நான் தீவிர விஜய் ரசிகையானேன் என்றார் ராஷ்மிகா.