நடப்பாண்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ஏனெனில் 9 மாநில சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. ஒருவேளை ஜம்மு காஷ்மீருக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டால் எண்ணிக்கை 10ஆக மாறிவிடும். இவை அனைத்துமே அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டம் ஆகும். இந்நிலையில் நடப்பாண்டு சட்டமன்ற தேர்தல் தொடர்பான முதல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்று வெளியிடுகிறது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்களான நாகாலந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.