‘கனரா வங்கி’ நகை கடன் பிரிவில் ரூ.41 லட்சம் மோசடி.. பணத்தை கையாடல் செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..!

திருச்சி மாவட்டம் துறையூரில், நகை கடன் பெற வந்த வாடிக்கையாளர்களிடம் 2 விண்ணப்பங்களில் கையெழுத்துவாங்கி 41 லட்ச ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கரையில் இயங்கிவரும் கனரா வங்கியின் நகை கடன் பிரிவில் 41 லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தணிக்கையின்போது தெரியவந்தது.

விசாரணையில், அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிவந்த முகேஷ், நகை கடன் பெறவருவோரிடம் 2 விண்ணப்பங்களில் கையெழுத்துவாங்கிக்கொண்டு, ஒன்றில் உள்ளபடியே நகை எடையை குறிப்பிட்டு, மற்றொன்றில் எடையை கூடுதலாக குறிப்பிட்டு அதிக கடன் பெற்று, அந்த பணத்தை கையாடல் செய்ததும் தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.