பிரதமர் மோடி அரசுக்கு எதிராக காங். குற்றப்பத்திரிக்கை

கதுவா: பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் குற்றப்பத்திரிக்கை தயாரித்துள்ளதாகவும், அதனை இன்று வெளியிடுவதாகவும் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘ராகுல்காந்தி தலைமையிலான ஒற்றுமை யாத்திரையானது பாஜ-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு இடையேயான போராட்டமாகும்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் குற்றப்பத்திரிக்கையை தயாரித்துள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையை டெல்லியில் சனிக்கிழமை(இன்று) வெளியிடப்படுகின்றது.,இவற்றின் நகலோடு ராகுல்காந்தியின் செய்தியையும் எடுத்துக்கொண்டு நாங்கள் வீடு வீடாக சென்று 2 மாதத்துக்கு பிரசாரம் செய்ய உள்ளோம். அடுத்த வாரம் இந்த பிரசாரத்தை தொடங்குகிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.